NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணவர்களுக்கு இடையில் தொடரும் வன்முறை சம்பவங்கள் – வவுனியாவில் மாணவன் மீது தாக்குதல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் ஒருவர் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்;று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) மாலை குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொளுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றொரு இளைஞர் குறித்த மாணவன் மீது இரும்பு மற்றும் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

படுகாயமடைந்த மாணவன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles