NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை இருவர் கைது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து அதிக விலைக்கு மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இருவர் போதைப்பொருள் கையிருப்புடன் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று சுன்னாகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்த போது, அவரிடமிருந்து 840 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 23 ஆம் திகதி யாழ் மானிப்பாய் பகுதியில் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்தும் 1,400 போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ், மாவட்டத்திலும் நகரிலும் பல பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாறுவேடத்தில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles