NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அனுராதபுரம் – இபலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கெலேதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றிற்குச் சென்றிருந்த போது காணியைச் சுற்றியிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரது சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles