(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை மின்சார சபை தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான துணை மின்சாரத்தை இலங்கை மின்சார சபை வாங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.