NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மியன்மார் இராணுவம் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி!

மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக போரடி வரும் மக்கள் மீது அந்த நாட்டு இராணுவம் அடக்குமுறையை கையாண்டு வருவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், அந்த நாட்டின் சாஜைங் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான அமைப்பினர் தங்கியிருக்கும் பகுதியில், மீது இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரில் இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles