NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் – வெற்றிப் பெறப்போவது யார்…?

துருக்கியில் கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. 

இதில் தற்போதைய ஜனாதிபதி தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது. 

துருக்கியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. 

இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். 

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இன்று துருக்கியில் ஜனாதிபதி தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles