NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முட்டையில் வெடிப்பை மறைக்க பசை தடவப்படுகின்றதா?

முட்டையில் ஏற்பட்ட வெடிப்பை மறைக்க பசை தடவப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்று கேகாலையில் இன்று பதிவாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தெரணியகல அமைப்பாளர் ரஞ்சித் பொல்கம்பொல இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரஞ்சித் பொல்கம்பொல, முட்டையின் மேற்பரப்பில் சுமார் மூன்று மில்லிமீட்டர் அகலமுள்ள தோராயமான கோடு காணப்பட்டுள்ளது.

இந்த கோடு கரடுமுரடாக இருந்தது. மீதமுள்ள மேற்பரப்பு வழக்கம் போல் மென்மையாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை கேகாலையில் உள்ள ஒரு சில்லறை விற்பனை நிலையத்திலிருந்து பத்து முட்டைகளை வாங்கினேன். அதில் ஒரு முட்டை வழக்கத்திற்கு மாறானதாக இருப்பதைக் கண்டேன். அதன் மீது கரடுமுரடான மற்றும் பசைபோல் தெரிந்த ஒரு பரப்பு இருந்தது.

முட்டையில் உள்ள விரிசல்களை மறைக்க பசை பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கிறோம்.

இந்த குறிப்பிட்ட முட்டை ஏனைய முட்டைகளை விட கனமானது. இது குறித்து விசாரணை நடத்த நுகர்வோர் விவகார அதிகாரசபையை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

உண்மையைக் கண்டறிய அந்த முட்டையை நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விஞ்ஞானப் பரிசோதனை அவசியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

முட்டைக்குள் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. எனவே உண்மையை கண்டறிய அறிவியல் சோதனை நடத்த வேண்டும்,” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles