NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ருவாண்டாவில் பெய்துவரும் கனமழையில் சிக்கி 129 பேர் பலி!

ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் பெய்துவரும் கனமழை காரணமாக, இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ஏராளமான குடியிருப்புகள், விளை நிலங்கள், வீதிகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேபோல் அண்டை நாடான உகண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles