NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லெபனானில் இருந்து இஸ்ரேலின் வடக்கு பகுதி மீது தாக்குதல்!

லெபனானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா நகரின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரே நேரத்தில் சுமார் 12 ஏவுகணைகளை ஹமாஸ் போராளிகள் ஏவியுள்ளனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

காசா வாழ் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானில் இருந்து கிரியாத் ஷ்மோனா நகரை ஏவுகணை மூலம் தாக்கியதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர். 

Share:

Related Articles