NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வயிற்று வலி காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு…!

வயிற்று வலி காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த இச்சிறுவன், தர்கா நகரிலுள்ள ஸ்ரீ ஞானஸ்சார கல்லூரியின் கல்வி கற்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் வாந்திபேதி ஏற்பட்டதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.

இந்நிலையில், தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கும் சிறுவன் மேலதிக சிகிச்சிகை;காக மாற்றப்பட்ட நிலையிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், 3 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் தனது மகனின் நோய் நிலைமை கண்டறியப்படவில்லை எனவும், முiறான சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் உயிரிழந்த சிறுவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles