NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வயோதிப தாயை தூக்கி வீசிய மகன் – தாய் பலி, மகன் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புச்சந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வயோதிப பெண் ஒருவரை மகன் தூக்கி வீசியதால் அவர் உயிரிழந்துள்ளார்.

89 வயதுடைய அந்த பெண்ணை அவரது மகன் தூக்கி வந்து படுக்கையில் வீசியதை தான் பார்த்ததாகவும் அந்த நேரத்தில் இறந்தவரின் தலை படுக்கையில் மோதியதாகவும் பின்னர் அவர் முகம் மற்றும் மார்பில் உதைத்ததாகவும் இறந்தவரின் பேரன் நேற்றைய தினம் (14) வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக 46 வயதுடைய இறந்தவரின் மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை இன்று (15) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles