NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வழமைக்கு திரும்பும் புகையிரத சேவை!

இந்திய-இலங்கை கூட்டு திரைப்படத்தின் படப்பிடிப்பின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் எல்ல பிரதேசத்துக்கும் இடையில் 7 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதர புகையிரத சேவை இன்று முதல் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் வழமை போன்று செயல்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை முதல் பொடி மெனிகே, உடரட மெனிகே, இரவு தபால் புகையிரதம்;, ஒ.டி.சி புகையிரதம் உள்ளிட்ட அனைத்து புகையிரதங்களும் கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்குமென புகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles