NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்தில் சாதாரண தரப் பரீட்சை மாணவி படுகாயம்!

பலாங்கொடை வெலிகேபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் மீது அதே வீதியில் இரும்புக் கம்பிகளை ஏற்றி பயணித்த லொறி ஒன்றிலிருந்து இரும்புக் கம்பிகள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உட்புகுந்ததில் மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.

குறிந்த விபத்தில் காயமடைந்தவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவியொருவராவார்.

மாணவி பரீட்சை எழுதிவிட்டு வீடு செல்லும்போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த மாணவி கழுத்து மற்றும் முகப்பகுதிகளில் கம்பி குத்தி காயமடைந்ததையடுத்து பலாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles