NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீட்டு குளியலறையில் இருந்து மீட்கப்பட்ட பாடசாலை மாணவியின் சடலம்…!

பலாங்கொடை பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பலாங்கொடை காவற்துறையினரால் குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரேத பரிசோதனைக்காக சடலம் பலாங்கொடை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles