NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடக்கம் செய்யப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு இறந்தவர் வீடு திரும்பிய அதிசயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி, முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பஸ் நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்திருந்தார். சடலம் அடையாளம் காண முடியாத நிலையில், இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கம்பளை, மேரிவில வத்தையில் இருந்து ஒரு பெண் மற்றும் சிலர் வருகைதந்து, உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் கண்டு, பிரேத பரிசோதனையின் பின்னர், மத சடங்குகளை மேற்கொண்டு அடக்கம் செய்துள்ளனர்.

எனினும், இறுதிச் சடங்கு நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இறந்த நபரும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் குறித்து தெரிவிக்க மரண விசாரணை அலுவலகத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles