NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இயல்பு நிலை பாதிப்பு!

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியதுடன், 110 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர தலைநகர் புதுடெல்லி வரை இயக்கப்படும் 25 புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, நெடுஞ்சாலைகளில் நடந்த வீதி விபத்துகளில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles