NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பாறை மாவட்டத்தில் பெருகிவரும் விஷ ஜந்துக்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழைவெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்த ஆற்று முகத்துவாரம் வெட்டப்பட்டிருந்த நிலையில், பல்வேறு விஷ ஜந்துக்கள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இவை நடமாடி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகரிப்பினால் கடற்கரை பகுதிகளில் அதிகரித்துள்ளதனால் கடற்கரை பகுதிகளுக்கு செல்கின்ற பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share:

Related Articles