NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிக்காக இலங்கை குழாம் தென் கொரியா நோக்கி பயணம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தென் கொரியாவில் ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றும் 8 வீர, வீராங்கனைகள் அடங்கிய இலங்கை குழாம் தென் கொரியாவை சென்றடைந்துள்ளது.

இலங்கை குழாத்தில் இடம்பெறுவோரில் அண்மைக்காலமாக பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன பிரதான இடம்பிடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தியகமவில் நடைபெற்ற கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுநர் தேர்வுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றிய அவர், 2 நிமிடங்கள், 01.39 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றி பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த வருடம் உலக மெய்வல்லுநர் அரங்கில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான அதிசிறந்த நேரப்பெறுதியையும் அவர் பதிவு செய்திருந்தார்.

அவரை விட மேலும் மூன்று வீராங்கனைகள் இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றர்.

Share:

Related Articles