NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுபவதே எனது எதிர்பார்ப்பு – மஹிந்த

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுபவதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா். 

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதை தவிர, எதிர்த் தரப்பாக செயற்படவோ அல்லது எதிர்க் கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளவோ தனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா். 

கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டாா். 

மேலும் அவர், தற்போதுள்ள தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை கொண்டே அடுத்த தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டாா். 

” கட்சிக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நாடு போதைப்பொருள் பாவனையின் காரணமாகவே அழிவடைந்துகொண்டிருக்கிறது. அதன் காரணமாக போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமே இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த பணியாக கருதுகிறேன். 

அதேபோன்று, எதிர்க் கட்சிப் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் நான் இருப்பதாக வெளியாகும் கருத்துக்களில் உண்மை இல்லை. அடுத்த தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றுவதே எங்களின் எதிர்பார்ப்பாகும். எதிர்த் தரப்புக்குச் செல்லும் எதிர்பார்ப்பு இல்லை. 

இதேவேளை, வரிகளை முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. வரிகள் நாட்டின் வருமானத்துக்கு அவசியமானவையாகும். மக்களுக்கு சாதாரண முறையிலான வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளாா்.

Share:

Related Articles