NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இசைக்கருவிகளில் போதை பொருட்களை கடத்திய சங்கீத ஆசிரியர் கைது

இசைக்கருவிகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து கடத்தலில் ஈடுபட்டு வந்த சங்கீத ஆசிரியர் ஒருவர் ஆதுருப்புவீதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுமார் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை குறித்த நபர் இசைக்கருவிகளின் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சங்கீத ஆசிரியரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, 372 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும்; ஒரு கிலோ 558 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இசைக்கருவிகளுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என்பதுடன் பாரியளவான போதைப்பொருளை வியாபாரியொருவரின் போதைப்பொருட்களை மொத்தமாக விநியோகித்து வந்தவர் என்றும் இவர் சுமார் 6 மாதங்களாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles