NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இசைநிகழ்ச்சியில் கத்திக்குத்து – ஒருவர் பலி…!

இன்று (05) அதிகாலை இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பழம் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles