NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணைய காப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

இணைய காப்பு சட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த விசாரணை தொடர்பான வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட தரப்பினர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதற்கமைய குறித்த வழக்கு ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles