NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவைப் புறக்கணித்து சீனாவுடன் இணையும் புடின் !

ஜி 20 மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் ரஷ்ய ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசிவாயிலாக அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரும் ஒக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள பெல்ட் அண்ட் ரோட் மாநாட்டில் கலந்துகொள்ள புடின் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில் அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி புடினை போர்க்குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்காரணமாக ரஷ்யாவை விட்டு எங்கேயும் செல்ல முடியாத நிலையில் புடின் உள்ளார்.

எவ்வாறு இருப்பினும் முதன்முறையாக இக் கட்டுப்பாட்டை கடந்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின்பேரில் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள புடின் சீனாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஷி ஜின்பிங் மாஸ்கோ பயணம் மேற்கொண்டதும் இரு தலைவர்களும் தங்கள் தோழமைக்கு எந்த வித எல்லையும் இல்லை என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles