NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலம் அமைப்பது தொடர்பில் சரத் பொன்சேகாவின் கருத்து!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கப் பாலம் அமைக்க வேண்டிய அவசியம் இந்த நேரத்தில் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மூன்று வேளை உணவளிக்கும் வழியைக் கண்டுபிடிப்பதே சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் பாலம் அமைப்பது இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நாடு இன்னும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தாலும், அவர்களுக்கும் சில உள்ளக அரசியல் பிரச்சினைகள் உள்ளன. அந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளன. ஆகையால் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கப் பாலம் அமைக்க வேண்டிய அவசியம் இந்த நேரத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles