NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களையும், 191 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவொன்றையும் அவர் பிரதமரிடம் கையளித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், மீனவர் பிரச்சினைக்கு வெளியுறவு அமைச்சர் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் உறுதியளித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கச்சத்தீவை தி.மு.க தாரை வார்த்ததாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், சட்டப்படி வழக்கை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு விடுதலை பெறுவார் என்றும் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles