NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் – பி.வி சிந்து 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று (13) ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8ஆம் நிலை வீரரான பிரனோய் முதல் சுற்றில் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் உலகின் 11ஆம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார்.

ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நேற்று தொடங்கிய நிலையில், எதிர்வரும் மாதம் மாதம் ஜூன் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பி.வி சிந்து, எச்.எஸ். பிரனோய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா பங்குப்பற்றியுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து முதல் சுற்றில் இந்தோனேஷியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-15, என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் பி.வி.சிந்து 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Share:

Related Articles