NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தானின் அரச ரகசியங்கள் கசிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இடம்பெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அபுல் ஹஸ்னத் சுல்கர்னைன் இன்று (30) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த சிறப்பு நீதிமன்றம் அதிகாரபூர்வ ரகசிய சட்டம் 2023 இன் கீழ் நிறுவப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பானது பெப்ரவரி 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles