NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரத்மலானை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது..!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

மொரட்டுவை பொலிஸ் அதிவிரைவு உந்துருளி குழுவினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கடத்துவதற்காகத் தயார் நிலையில் வைத்திருந்த குறித்த போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்போது, PREGABALIN என்ற 500 போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles