NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரு பிரதான மதுபான ஆலைகளில் மது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

நாட்டின் இரண்டு பிரதான மதுபான ஆலைகளில் மது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிய காலத்தில் வரி செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் (W. M. Mendis & Co Ltd) மற்றும் ரந்தெனிகல (Randenigala Distileries Lanka (Pvt) Ltd) ஆகிய நிறுவனங்களில் மது உற்பத்தியே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் வரி செலுத்தத் தவறியதால், மேற்கூறிய மதுபான ஆலைகளின் உரிமங்களும், ஏனைய மூன்று மதுபான ஆலைகளின் உரிமங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Share:

Related Articles