NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை விடுவிக்க விசேட குழு நியமனம்!

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட ஒருங்கிணைப்புக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று (27) முதல் அமுலாகும் வகையில் குறித்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தரநிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும், பதிவு காலாவதியான மருந்துகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி வரை மீண்டும் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles