NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுகிறார் ரஷீட் கான்!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இழந்துள்ளார்.

IPL இறுதிப் போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற IPL இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும், 3ஆவது ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles