NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் பிரபல காலணி வர்த்தக நிறுவன பணிப்பாளரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொரளை குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் வாயிலில் இன்று (22) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், வாயிலில் இரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீடு இலங்கையின் பிரபல காலணி வர்த்தக நிறுவன குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் போது அவரும் வீட்டிற்குள் இருந்தமையால் காயமின்றி தப்பியதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Share:

Related Articles