NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் பெரும்பாலான மீனவர்கள் நீச்சல் திறன் அற்றவர்கள் – இலங்கை உயிர்காப்பு சங்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையின் பெரும்பாலான மீனவர்கள் நீச்சல் திறன் அற்றவர்கள் என இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் தலைவர் அசங்க நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மீனவர்கள் தங்களால் நீந்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். எனினும், கடலில் அவர்களின் உயிர்களை காப்பாற்றும் அளவுக்கு அவர்களிடம் நீச்சல் திறமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களிற்கு தொடர்ச்சியாக 10 நிமிடங்களிற்கு 200 மீற்றர் நீந்தக்கூடிய திறன் அவசியம். இதுவே சர்வதேச தராதரம் என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 6 நிமிடங்களில் 200 மீற்றர் நீந்தக்கூடிய திறன் அவசியம் எனவும் ஆழ்கடலில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடுபவர்கள் 9 நிமிடங்களில் 400 மீற்றர் நீந்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறிருந்தபோதும், மீனவர்கள் உயிர்காக்கும் அங்கிகளை அணிவதில்லை எனவும் அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

அனைத்து படகுகளுக்கும் உயிர்காக்கும் அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலானவர்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கியுள்ள உயிர்காக்கும் அங்கிகள் சிறந்த தரத்திலானவை. ஆனால் மீனவர்கள் எவரும் அவற்றை பயன்படுத்துவதில்லை. அவர்கள் எந்த கடலிலும் தங்களால் நீந்த முடியும் என்று நினைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அங்கிகள் அவசியமில்லை என க்கருதுகின்றனர் என இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் தலைவர் அசங்க நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் மூவர் கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles