NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் மயங்கி விழுந்து இருவர்  உயிரிழப்பு! 

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (06) திடீரென மயங்கி விழுந்து இருவர்  உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

அதன்படி  கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மயங்கி  விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

கலவான பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியாவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடைக்குச் சென்று திரும்பும் போது திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார் என  மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

எதிரிசூரிய ஆராச்சி – பன்னிபிட்டிய ஆரவல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர்,  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விரிவுரையாளர் தனிப்பட்ட தேவைக்காக மஹரகம நகருக்கு அருகில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்த சமயமே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.  

Share:

Related Articles