NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கம் கடலில் வீசப்பட்டது!

இலங்கையில் இருந்து 10 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற நிலையில், அதனை கடலில் வீசிய மூவரை தமிழக புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் மண்டபம் பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 10 கிலோ தங்க கட்டிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மண்டபம் பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த மூவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது முன்னுக்கு பின் முரணாக பதில்களை அளித்த அவர்கள் தங்க கட்டிகளை மணலி தீவிற்கு அருகில் கடலில் வீசியதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்கக் கட்டிகளை மீட்க சுழியோடிகள் மற்றும் முத்துக்குளிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles