NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும் : சங்கக்கார

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியின் பிரச்சினை எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் சேனலுக்கு பேட்டியளித்த அவர், அணியில் தற்போது திறமை குறைவாக உள்ளது, ஆனால் ஆரம்ப துடுப்பாட்ட பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.

உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக அவர்கள் தங்கள் துடுப்பாட்ட நிலையை ஸ்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் சங்கக்கார குறிப்பிடுகிறார்.

அவர்கள் எப்படி வெற்றிகரமாக ஸ்கோர் செய்வது மற்றும் எப்படி விளையாடுவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் தங்கள் துடுப்பாட்டத்தினை இன்னும் போட்டித்தன்மையுடன் பராமரிக்க உழைக்க வேண்டும் என்று சங்கக்கார வலியுறுத்தினார்.

Share:

Related Articles