NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக துஷாரா ரத்நாயக்க நியமனம்..!

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அத்தோடு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் துஷாரா ரத்நாயக்க பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles