NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – இந்தியா கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பெப்ரவரி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாகப்பட்டினம்- காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) இடையிலான குறித்த பயணிகள் படகு சேவை பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

பெப்ரவரி 15 ஆம் திகதி சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், எனவே சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்ப திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, ‘செரியபாணி’ பயணிகள் படகு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைவதன் மூலம் படகு சேவையின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

இதன்மூலம் 40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

‘செரியபாணி’ என்பது 35 மீட்டர் நீளம் கொண்ட அதிவேகக் கப்பலாகும், இது 150 பயணிகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் ஆகும், ஒரு வழி பயணத்திற்கு இலங்கை ரூபாய் 26,750 மற்றும் இருவழிப்பயணத்துக்கு 53,500 ரூபாயும் அறவிடப்பட்டது.

குறித்த கட்டணங்களில் மாற்றங்களை மேற்கொள்ள இதுவரை உத்தேசிக்கப்படவில்லை என்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

Share:

Related Articles