NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 சதவீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிப்பு!

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 சதவீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் மற்றுமின்றி இலங்கையில் குருட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று க்ளூகோமா ஆகும்.

இலங்கையில் சுமார் 5மூ ஆனோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பும் முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவேஇ கண் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என வைத்தியர் பாலித மஹிபால வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

Related Articles