NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வந்த விமானத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இந்தியருக்கு விளக்கமறியல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சவூதி அரேபியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இந்திய பிரஜை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை குற்றவியல் சட்டத்தின் 345ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (14) உத்தரவிட்டுள்ளார்.

8 வயது 10 மாத வயதுடைய சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக விமான ஊழியர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles