NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உணவு ஒவ்வாமை காரணமாக 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

பொலன்னறுவை – பகமூன பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகப் பகமூன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னரே இவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பகமூன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பகமூன (Bakamuna) வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பகமூன (Bakamuna) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles