NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உப பொலிஸ் பரிசோதகரை கத்தியால் தாக்க முயற்சித்தவர் கைது..!

கண்டி-மாத்தளை வீதியில் வேன் ஒன்றுக்கருகில் கத்தியை வைத்திருந்த நபரை தேடும் போது உப பொலிஸ் பரிசோதகரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கண்டி பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கடமையில் ஈடுபட்டிருந்த போது தாக்க முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles