NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உறங்கிகொண்டிருந்த மனைவியை கொலை செய்த கணவன் கைது!

பொலன்னறுவை – அரலகங்வில பிரதேசத்தில் கணவன் மனைவியை படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தை செய்த சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles