NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உறங்கிக்கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு!

தொட்டகொட, குருந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹிச்சிமல்லி என்றழைக்கப்படும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, குருந்தகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் மூத்த சகோதரனும் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அக்மீமன பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles