இலங்கையில் ஊழியர்களுக்கு EPF இனை முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ”மஹிந்தஜயசிங்க”தெரிவித்துள்ளார்.
மேலும் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து சலுகைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்காலத்தில் தளர்த்துவதற்கான நடவடிசிக்கல்கள் எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அதிகமான மக்கள் பயனடைய வாய்ப்புகள் உள்ளது எனவும் தொழிலாளர் பிரதி அமைச்சர் ”மஹிந்த ஜயசிங்க” கூறியிருந்தார்.