NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடன் பணத்தை திருப்பி கேட்டதால் நடந்த கொடூரம்…!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவருக்கு தான் கடனாக கொடுத்த மூவாயிரம் ரூபாய் பணத்தை கேட்டதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கடன் கொடுத்த பிறைந்துறைச்சேனை தாஜ்மஹால் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை (20) 4 மணியளவில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கத்தியால் குத்திய நபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles