NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடும் வரட்சியால் 5,000 பேர் பாதிப்பு!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வரக்காபொல, ருவன்வெல்ல, எட்டியாந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ மற்றும் கேகாலை ஆகிய பிரிவுகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles