NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவியின் விபரீத முடிவு – வவுனியாவில் சம்பவம்…!

வவுனியாவில் மாரடைப்பால் கணவன் உயிரிழந்ததை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,இச்சம்பவம் நேற்றைய தினம் (18) மதியம் வவுனியா – நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து குறித்த நபரை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்ற போது , நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

.

Share:

Related Articles