NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயம்!

கண்டி – திலக் ரத்நாயக்க வீதியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 7 வாகனங்களுக்கும் இதன்போது சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கண்டி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து குறித்த மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share:

Related Articles