NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்பளை – நெட்டாபிட்டிய பிரதேசத்தில் விபத்து : பத்து பேர் படுகாயம் !

பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பதினைந்து பேரை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக ஜீப் ஒன்று கம்பளை நெட்டாபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இரவு வீடு திரும்பிய போதே அதிகாலை நான்கு மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி தூங்கியதால் விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் ,குழந்தைகள் உட்பட ஆறு பெண்களும் ஒன்பது ஆண்களும் குறித்த வாகனத்தில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles